ஒரு தாயின் 30 ஆண்டு கால தவிப்பை.. மக்கள் மன்றத்தில் கூறிய கமலுக்கு அற்புதம்மாள் நன்றி!
சென்னை: தனது பாச போராட்டத்தை பல கோடி பேர் பார்க்கும் தொலைகாட்சியில் கூறிய கமல்ஹாசனுக்கு வணக்கம் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை முடிந்தும் சிறை உள்ள7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசியல்வாதிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அவர்களை விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.
இதையடுத்து அவர்களை விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கையெழுத்திட்டால் அந்த 7 பேரும் விடுதலை செய்யப்படுவர்.
குற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை...
— Arputham Ammal (@ArputhamAmmal) January 18, 2021
ஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை...
பலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே!
🙏🏻#ReleasePerarivalan pic.twitter.com/aEiTqVPG0k
ஆனால் அவர் இன்னமும் கையெழுத்திடவில்லை. இந்த நிலையில் கமல்ஹாசன் அற்பும்மாள் குறித்து தனது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசினார். அவர் கூறுகையில் தனது மகனுக்காக கால் நூற்றாண்டுகளாக போராடி வருகிறார், அதுவும் ஒரே ஒரு கையெழுத்திற்காக என அற்புதம்மாளின் பாச போராட்டம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு கையெழுத்திற்காக கால் நூற்றாண்டாக போராடும் அற்புதம்மாள்.. பிக்பாஸில் நெகிழ்ந்த கமல்
இதை அறிந்த அற்புதம்மாள் ட்விட்டரில் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரத் தனது ட்விட்டரில் கூறுகையில் குற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை...
ஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை... பலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே! என தெரிவித்துள்ளார்.