சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் கூறியதாலேயே ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்தார்.. குருமூர்த்தி பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓபிஎஸ் தியானம் - குருமூர்த்தி சர்ச்சை பேச்சு | Gurumurthy Speech OPS

    சென்னை: நான் கூறியதாலேயே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் தியானம் செய்தார் என்று துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்த நிலையில், அப்போது முதல்வராக பொறுப்பேற்ற இப்போதைய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் சசிலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் தொடங்கினார்.

    இதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த அவர், தன்னை முதல்வர் பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தாக கூறி பரபரப்பை ஏற்படுதினார்.

    சிறையில்

    சிறையில்

    அதன் பிறகு அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஒ பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்தது. சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டிய நிலையில் திடீரென ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததால் பெங்களூரு சிறைக்கு செல்ல நேர்ந்தது.

    சசிகலா டிடிவி நீக்கம்

    சசிகலா டிடிவி நீக்கம்

    இதன் காரணமாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்து அவரை முதல்வராக பதவி ஏற்க வைத்துவிட்டு அன்றே சிறைக்கு சென்றார். அதன்பிறகு சில மாதங்களில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

    ஓபிஎஸ் துணை முதல்வர்

    ஓபிஎஸ் துணை முதல்வர்

    அதேநேரம் பிரிந்து கிடந்த அதிமுக ஒன்று சேர்ந்தது. ஒ பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றார். அதிமுக என்ற கட்சி தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டை தலைமையின் கீழ் வந்துள்ளது.

    ஒபிஎஸ் தியானம்

    ஒபிஎஸ் தியானம்

    இந்நிலையில் நான் கூறியதாலேயே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் தியானம் செய்தார் என்று துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்,

    அதிமுகவை இணைத்தேன்

    அதிமுகவை இணைத்தேன்

    ஓபிஎஸ் தியானம் செய்ததன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஓபிஎஸ்சின் தியானத்திற்கு பின் பிரிந்து கிடந்த அதிமுகவை தானே ஒருங்கிணைத்தேன் என்றும் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    English summary
    thuglak editor Gurumurthy said that As I said, O Paneerselvam meditated on Jayalalithaa's memorial
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X