சட்டசபை தேர்தல் 2021: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு
சென்னை: சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட திமுக தலைமைக் கழகம் குழு அமைத்துள்ளது.
அதன்படி குழு தலைவராக டி.ஆர்.பாலு இருப்பார். உறுப்பினர்களாக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் இ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் இந்த குழுவினர் தான் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த போகின்றனர். திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி என்பது விரைவில் இறுதியாகும் என தெரிகிறது.