சட்டசபை தேர்தல் பிரசாரம்: தூத்துக்குடியில் ராகுல் காந்தி- உற்சாக வரவேற்பு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தூத்துக்குடி வருகை தந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்ப்பளித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறும். தமிழகத்தில் ஏற்கனவே பிரசாரம் களைகட்டி இருக்கிறது.
தமிழகம், புதுவையில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பிரசாரம் செய்துள்ளனர். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகை தருகிறார். இன்று இரவு 10 மணிக்கு சென்னை வரும் அமித்ஷா, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் தமிழகத்தின் விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் பங்கேற்கிறார்.
#WATCH Tamil Nadu: Congress leader Rahul Gandhi arrives in Thoothukudi. pic.twitter.com/a6LcNWU2ot
— ANI (@ANI) February 27, 2021
இதனிடையே 3 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகை தந்தார் ராகுல் காந்தி. டெல்லியில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமானத்தில் வருகை தந்தார் ராகுல் காந்தி.
தூத்துக்குடி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.