சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Tamilnadu Auto: தமிழக அரசு அதிரடி.. இன்று முதல் ஆட்டோக்களை இயக்க அனுமதி.. முக்கிய கன்டிஷன்கள் உண்டு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர, பிற மாவட்டங்களில் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆட்டோக்கள் இயக்கப்படலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

Recommended Video

    Auto can be run, says TN Government | நாளை முதல் ஆட்டோக்களை இயக்க அனுமதி

    சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆட்டோக்கள் இயங்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.

    அதேநேரம், ஆட்டோக்களை இயக்க, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த விவரமும் அரசின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அப்படி என்ன கூறியுள்ளது அரசு என்பதை பார்க்கலாம்.

    சுய சார்பு பொருளாதாராம்.. அன்றே சொன்னாரே சீமான்.. யாருமே கேட்கலை.. வாசகரின் ஆதங்கம்!சுய சார்பு பொருளாதாராம்.. அன்றே சொன்னாரே சீமான்.. யாருமே கேட்கலை.. வாசகரின் ஆதங்கம்!

    ஒரே பயணி

    ஒரே பயணி

    ஒரு ஓட்டுனர், ஒரு பயணி என்ற விகிதத்தில் ஆட்டோக்களை இயக்க வேண்டும், அதற்கு மேல் ஆட்களை ஏற்றக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஷேர் ஆட்டோக்கள் என்ற பெயரிலான ஆட்டோ கான்செப்ட் இனி இருக்காது. ஷேர் ஆட்டோ என்றாலே, ஒருவருக்கு மேல் பயணிக்கும் ஆட்டோதான்.

    சென்னைக்கு அனுமதியில்லை

    சென்னைக்கு அனுமதியில்லை

    கிருமி நாசினி கொண்டு பயணி கைகளை சுத்தப்படுத்திய பிறகே ஆட்டோவில் ஏற வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்கலாமே தவிர, பிற நேரங்களில் இயக்க கூடாது. நாளை முதல் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க முடியும்.

     முகக்கவசம்

    முகக்கவசம்

    டிரைவர் ற்றும் பயணிக்கு, முகக்கவசம் கட்டாயம். முகக் கவசம் அணியாமல் பயணிகள் ஏறக் கூடாது. டிரைவர் இயக்க கூடாது. ஒவ்வொரு முறை பயணி இறங்கி சென்ற பிறகும், கிருமி நாசினி கொண்டு, ஆட்டோ சுத்தம் செய்யப்பட வேண்டும். கண்டெயின்மென்ட் பகுதியில் ஆட்டோக்களை இயக்குவதற்கு அனுமதி கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டங்கள்

    போராட்டங்கள்

    ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் தினசரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்த நிலையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Except Chennai, Auto rickshaws can be run other districts, from tomorrow, says Tamilnadu Government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X