சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதய அறுவை சிகிச்சைக்கு பணம் தேவை.. சிறுவனுக்கு உதவுங்களேன்

சென்னை: ஆயுஷ்-ஆறு வயது சிறுவன்- நேபாள நாட்டை சேர்ந்த கிஷோர் என்பவரின் மகன். சென்னையில் வாட்ச்மேனாக வேலை பார்க்கிறார் கிஷோர். ஆயுஷுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனதால், அவரை சென்னை மருத்துவனையில் சிகிச்சையளிக்க அழைத்து சென்றார் கிஷோர். விரைவிலேயே உடல் நிலை சரியாகிவிடும் என்று நினைத்தார் கிஷோர்.

ஸ்டான்லி மருத்துவமனைக்கு முதலில் ஆயுஷுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பிறகு ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர்கள் சோதித்து பார்த்து ஆயுஷுக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பதாகவும், அறுவை சிகிச்சை தேவை என்றும் கூறினர். ஆனால், எந்த மருத்துவமனையிலும், ஆயுஷுக்கு சிகிச்சையளிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஏனெனில், செலவிட கிஷோரிடம் பணம் இல்லை.

 Ayush From Nepal Need our Support

கிஷோர் இந்திய குடிமகன் இல்லை என்பதால், உள்ளூர் அரசாங்கங்களின் நிதி உதவியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஆயுஷை, மியாட் மருத்துவமனையில், சிகிச்சைக்கு சேர்க்கச் சொல்லியுள்ளனர் டாக்டர்கள். கிஷோர் இப்போது நேபாளத்திற்கு தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து மனைவி பவ்னாவை சென்னை அழைத்து வர உள்ளார். ஆயுஷுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது அவனது தாயார் உடனிருக்க வேண்டும் என்பதால் அவர் வருகை தர உள்ளார். சிறுவனுக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு ரூ.1,60,000 நிதி உதவி தேவைப்படுகிறது.

நிதி உதவி அளிக்க உதவும் நல்லுள்ளங்கள் கீழ் கண்ட வகையில் உங்கள் நன்கொடையை வழங்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X