முழக்கமிட்டபடி வந்த காவியும், கருப்பும்.. உரிமைக்காக அணிவகுத்த ஆன்மீகம்.. திமுக பேரணியில் அதிசயம்
திமுக பேரணி கூட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்
Recommended Video
சென்னை: திமுக கூட்டத்தில் கருப்பு, காவி வேட்டி பார்த்திருக்கிறீர்களா.. அந்த அதிசயம் இன்று சென்னையில் நிகழ்ந்தது.. ஆம்.. திமுக பேரணியில் ஐயப்ப பக்தர்களின் பங்களிப்பு மிகப்பெரிய வலுவை பேரணிக்கு ஏற்படுத்தியது.
குடியுரிமை சட்டத்தை கண்டித்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து சென்னை பேரணியை அசரடித்தன,
வழக்கமான பேரணிக்குரிய அடையாளங்களையும் தாண்டி, ட்ரோன் கேமராக்கள் மூலம் வீடியோ பதிவு, ஏகப்பட்ட பந்தோபஸ்து என பிரம்மாண்ட பேரணி சென்னையையே குலுங்க வைத்து விட்டது.
பொதுவாக இந்த குடியுரிமை சட்டத்துக்கு இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவிப்பது அறிந்த சமாச்சாரமே.. ஆனால், இதில் இந்துக்களும் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது.. அதிலும் இந்து பக்தர்கள் கலந்து கொண்டு இன்று போராட்டத்தை முன்னெடுத்து சென்றது மதச்சார்பின்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களை பிரிக்காதே... திமுக பேரணியில் தலைவர்கள் முழக்கம்
திமுக போராட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் பங்களிப்பு என்றால் நம்ப முடிகிறதா.. அப்படித்தான் இன்று கலந்து கொண்டனர். ஏதோ திக-வை சேர்ந்தவர்தான் திமுக பேரணியில் வந்துவிட்டார்கள் என்று ஒரு செகண்ட் நினைத்துவிட்டார்கள்... ஆனால், வந்திருப்பவர்கள் ஐயப்ப பக்தர்கள். கருப்பு வேட்டியில் மட்டுமில்லாமல், காவி வேட்டியிலும் இவர்கள் பங்கெடுத்தனர்.
ஒருசிலர் காவி வேட்டி, கருப்பு வேட்டியுடன், திமுக தலைவர் ஸ்டாலினின் உருவப்படம் ஏந்திய பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டுள்ளனர். சாதி, எதிராக கட்சித் தலைவர்களும், தொண்டர்களும், இஸ்லாமிய அமைப்பினரும், பெருந்திரளாக கலந்துகொண்டுள்ளது மதத்தையும் தாண்டிய உணர்வு இந்த பேரணியில் இழையோடி வருவதை கண்கூடாக காண முடிகிறது.. இதுதான் ஜனநாயகம்.. இதுதான் மிகச்சிறந்த மனிதநேயம்!