பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகி உள்ளவர் எஸ்.எஸ். சிவசங்கர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தொகுதியில் வெற்றி பெற்றவர் ஆவார். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் வென்ற யாரும் அமைச்சர்களாக இருந்தது இல்லை. முதல்முறையாக பெரம்பலூர் மாவட்ட எம்எல்ஏவான எஸ்.எஸ். சிவசங்கருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
இந்த சூழலில் எஸ்.எஸ். சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இடம்பெறவில்லை,
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் கொரோனாவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்,