ராத்திரி.. லைட் ஆப் செய்த பிறகு.. ஷிவானியிடம் நெருங்கி.. உருக வைத்த பாலா-. வைரலாகும் போட்டோ!
சென்னை: லைட் ஆப் செய்யப்பட்ட பிறகு ஷிவானியிடம் பாலாஜி கதறி அழுதார்.. இந்த சீன்களைதான் நெட்டிசன்கள் இணையத்தில் போட்டு வைரலாக்கி வருகின்றனர்...!
பிக்பாஸ் சீசன் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருககிறது.. ஆஜீத் வெளியேறி விட்டார்.. மிச்சம் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை காட்டி வருகின்றனர்.
இதில் ஆரி - பாலா இருவருமே தினந்தோறும் பேசப்பட்டு வருகின்றனர்.. இருவரும் இருவேறு துருவங்களாக இருக்கின்றனர்.. ஆனாலும் ஆரிக்கு சாதகமாக கமல் மறைமுகமாக இருப்பதாக ஒரு பேச்சு உள்ளது..
அதற்கேற்றார்போல, ஆரிக்கு எதிரான கருத்துக்களை போட்டியாளர்கள் கமல் முன் வைத்தனர்.. அப்போது, கேள்விக்கான பதிலை சொன்னாலும், அவர் எதிர்பார்க்கிற பதில் என ஒன்றை நினைத்து திரும்ப திரும்ப கேட்கிறார்.. எங்களை டயர்ட் ஆக்கிவிடுகிறார்.. பேக்கெஜ் வைத்துகொள்ள வேண்டாம் எனச் சொல்லும் அவரின் ஆழ் மனத்தில் ஒவ்வொருவர் பற்றிய பேக்கெஜ் இருக்கிறது... ரூல்ஸ் தவிர மற்றவர்களோடு இணக்கமாக வாழ்தலும் பிக்பாஸ் வீட்டில் ஒரு தகுதி.. ஆனால், அதை ஆரி செய்வதில்லை" என்று அடுக்கி கொண்டே போனார்கள்.
ஆனாலும் ஹவுஸ்மேட்ஸ் சொன்ன எதையுமே கமல் காதில் வாங்கி கொள்ளவில்லை என்றே தெரிகிறது.. அத்தனை குறைகளும் உண்மைதானா என்றுகூட அவர் பரிசீலிக்கவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.. ஆனால், பாலா சத்தமாக பேசியதற்கு மட்டும் நிறைய கேள்விகளை கேட்டு கொண்டிருந்தார்..கடும் கோபத்தோடு விசாரனை செய்து கொண்டிருந்தார்..
அந்த கோபம் ஏன் பாலாவுக்கு வந்தது? யார் கோபப்படுத்தியது என்பது பற்றிய விசாரணையே இல்லை.. இதெல்லாம் ஒருதலைப்பட்சம் இல்லையா? என்றும் பிக்பாஸ் ரசிகர்கள் கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டனர். ஒருவழியாக நேற்று கமல் சென்றபிறகு, லைட் எல்லாம் அணைத்துவிட்டு ஷிவானியிடம் அழுது தீர்த்தார் பாலாஜி.. தன் தரப்பு நியாயங்களையும் எடுத்து வைத்தார்..
"உன் பக்கம் நியாயம் இருக்கு, ஆனால் அதை வெளிப்படுத்தறதுதான் தப்பா இருக்கு, அணுகும் முறை சரியா இல்லை" என்று ஷிவானி அட்வைஸ் தந்து கொண்டிருந்தார்.. இவர்கள் இருட்டில் பேசும் காட்சியை, ஒருசிலர் எடுத்து இணையத்தில் போட்டு வைரலாக்கி வருகின்றனர்... டீப் டிஸ்கஷன் போல என்றும், இதை மட்டும் ஷிவானி அம்மா பார்த்தால் அவ்வளவுதான் என்றும் பல கேப்ஷன்களை அதற்கு பதிவிட்டு வருகின்றனர்!