சந்தியாவின் வலது மார்பில் என் பெயர்.. என் மீது நிறைய காதல் .. பாலகிருஷ்ணன் பரபர வாக்குமூலம்
சந்தியா பற்றி பாலகிருஷ்ணன் புது தகவல்களை போலீசில் தெரிவித்துள்ளார்.
சென்னை: "என் மேல சந்தியாவுக்கு நிறைய காதல்.. அதனாலதான் அவள் வலது மார்பில் என் பெயரை பச்சை குத்தி கொண்டாள். அப்போது வலியால் துடித்துபோய்விட்டாள்" என்று மனைவியை கொலை செய்த பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நடத்தை சரியில்லை என்ற காரணத்துக்காக மனைவி சந்தியாவை கொன்றதாக பாலகிருஷ்ணன் கைதாகி போலீசாரின் விசாரணை பிடியில் உள்ளார்.
இந்நிலையில், காதல் மனைவி தன் மீது எந்த அளவுக்கு அன்பாக இருந்தார் என்பதை பாலகிருஷ்ணனே நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
காதல் கல்யாணம்
அப்போது பாலகிருஷ்ணன் சந்தியாவை பற்றி சொல்லி இருப்பதாவது: "காதலித்துதான் நாங்கள் கல்யாணம் செய்து கொண்டோம். என் மேல அவளுக்கு ரொம்ப அன்பு. அளவுக்கு அதிகமான காதலால்தான் என் பெயரை இடங்களில் பச்சை குத்திக்கொண்டாள்.
வலது மார்பில் பெயர்
முக்கியமா, அவள் வலது மார்பில் என் பெயரை பச்சை குத்திக் கொண்டபோது வலியால் கதறி துடித்தாள். அவள் அழுததை பார்த்ததும் நானும் அழுதுவிட்டேன். எங்கள் ரெண்டு பேருக்குமே சிவனை ரொம்ப பிடிக்கும். அந்த சிவன்-பார்வதி போலவே நாங்கள் வாழ ஆசைப்பட்டோம். அதனாலதான் சிவன் பார்வதியை கையில் பச்சை குத்திக்கொண்டாள்.
பிரியாணி கடை
அவளுக்காக நிறைய கஷ்டப்பட்டேன். ஆனா சினிமா வாய்ப்புதான் கிடைக்கல. அதனாலதான் பிரியாணி கடை வைக்க நேர்ந்தது. அப்பறமாதான் டைரக்டர் ஆனேன். கொஞ்ச நாள் முன்னாடிதான் என் பிரச்சனை எல்லாம் முடித்து விட்டு ஒரு படம் எடுக்க பிளான் பண்ணினேன். அந்த நேரத்தில்தான் இப்படி ஆயிடுச்சு" என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
குறையவில்லை
மேலும் "என் மீது அவளுக்கு இருந்த காதல், அவளை கொலை செய்யும் நாள் வரை குறையவில்லை" என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.