பேப்பர் கட்டிங் மெஷினை வைத்து சந்தியாவை துண்டு துண்டாக வெட்டினேன்.. "சைக்கோ" பாலகிருஷ்ணன்!
Recommended Video
சென்னை: சந்தியாவை கொன்றது எப்படி என்பது குறித்து பாலகிருஷ்ணன் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
சென்னை ஜாபர்கான்பேட்டையில் மனைவி சந்தியா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தவர் எஸ் ஆர் பாலகிருஷ்ணன். இவருக்கு சந்தியா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எந்த ஆணுடனும் பழக சந்தியாவை அனுமதிக்க மாட்டாராம்.
இந்தநிலையில் கடந்த 19-ஆம் தேதி சந்தியாவை கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளார். தகவலறிந்த போலீஸார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பாலகிருஷ்ணன் கூறுகையில் சந்தியாவை மரம் அறுக்கும் ரம்பத்தை வைத்து உடலை அறுத்தால் ரத்தம் கொட்டும் என்பதால் பேப்பர் கட்டிங் மெஷினை பயன்படுத்தி உடலை வெட்டினேன்.
மொத்தம் சந்தியாவை 7 துண்டுகளாக வெட்டினேன். அந்த உடல் பாகங்களை 4 கவர்களில் போட்டு தான் மட்டுமே பல்வேறு இடங்களில் வீசினேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். உடல் பாகம் எங்கே என கேட்டதற்கு கூவம் ஆற்றுக்கே வந்து அடையாளம் காட்டிய பாலகிருஷ்ணனோ தலை பாகம் எங்கே என்பதை மட்டும் கூற மறுக்கிறார்.