சந்தியாவை நான் கொல்லவில்லை.. கோர்ட்டில் திடீர் பல்டி அடித்த சைக்கோ பாலகிருஷ்ணன்!
Recommended Video
சென்னை: சந்தியாவை நான் கொல்லவில்லை என ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவரது கணவர் திடீர் பல்டி அடித்துள்ளார்.
சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சந்தியா. பாலகிருஷ்ணன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இந்த நிலையில் சந்தியாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஏற்கனவே சந்தியா மீது சந்தேகம் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் அவரது ஆசையால் கோபமடைந்துள்ளார். பின்னர் சந்தியாவிடம் பேசி நடிக்கும் ஆசையை விட்டு விடுமாறு கூறியுள்ளார். ஆனால் அவரோ அதற்கு மறுத்துள்ளார்.
தகராறு
இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி சந்தியாவுக்கு வாய்ப்பு வாங்கித் தருவதாக தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். இதை நம்பி சென்ற சந்தியாவிடம் நடிக்கும் எண்ணத்தை கைவிடுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
போலீஸ்
அப்போது வீட்டை விட்டு வெளியேற முயன்ற சந்தியாவை தடுத்து நிறுத்திய பாலகிருஷ்ணன் சுத்தியலை கொண்டு ஓங்கி அடித்துள்ளார். இதில் உயிரிழந்த சந்தியாவின் உடலை கூறு போட்டு ஆங்காங்கே வீசியுள்ளார். இதை போலீஸாரிடமும் தெரிவித்துள்ளார்.
கொல்லவில்லை
இந்த நிலையில் அவர் இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம், சந்தியாவை தான் கொல்லவில்லை என பாலகிருஷ்ணன் பல்டி அடித்துள்ளார்.
15 நாள் காவல்
அது போல் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் கேட்டபோதும் அவ்வாறே பதில் கூறியுள்ளார். இதனால் பெருங்குழப்பம் நிலவியுள்ளது. பாலகிருஷ்ணனுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.