‘பார் நாகராஜ்’ பின்னணியில் யார்.. அவசர நீக்கம் ஏன்.. ஒன்னுமே புரியலையே.. குழம்பும் பொதுமக்கள்!
பார் நாகராஜ் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்ற குழப்பம் எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: இப்படி நாகராஜை அவசர அவசரமாக பதவி, பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டால் எப்படி? இப்போ உண்மை தெரியாம போச்சே? என்று மக்கள் வெளிப்படையாக கேட்க ஆரம்பித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர்தான் இந்த பார் நாகராஜ். 34-வது வார்டு அதிமுக அம்மா பேரவை செயலாளர்.
டாஸ்மாக் பாரை லீசுக்கு எடுத்து நடத்தியதால்தான் இவருக்கு பார் நாகராஜ் என்ற பெயர் வந்ததாம். இதை தவிர வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார்.
நான் ஏன் மோடியைக் கட்டிப்பிடிச்சேன் தெரியுமா.. ராகுல் காந்தி வெளியிட்ட சுவாரஸ்ய விளக்கம்!
மறுநாளே ஜாமீன்
கைதான கொடூரர்கள் 4 பேருக்கும் இவர் நண்பர் ஆவார். கடந்த 27-ந்தேதி திருநாவுக்கரசு குழு செய்த அக்கிரமத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் என்னே ஒரு ஆச்சரியம்.. மறுநாளே ஜாமீனில் வந்துவிட்டார்.
அதிரடி நீக்கம்
ஆனால் விவகாரம் பெரிதாக வெடிக்கவும், அனைத்து கோபமும் அதிமுக மீது திரும்பவும் பார் நாகராஜை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டது அதிமுக தலைமை!
பேஸ்புக் பதிவுகள்
இந்த அதிரடியால் ஒரு பக்கம் சந்தோஷப்பட்டாலும், மற்றொரு பக்கம் ஏன் அவசர அவசரமாக நாகராஜை கட்சி நீக்கியது என்ற சந்தேகம் பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது. அதி முக்கிய அதிமுக நிர்வாகிகளுடன் இவருக்கு நெருக்கம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது சம்பந்தமான அவரது பேஸ்புக் பதிவுகளிலும் சில போட்டோக்கள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் யார் அந்த முக்கிய புள்ளிகள் என்பது உறுதியாக இதுவரை தெரியவில்லை.
அமுங்கி போச்சே
"ஒருவேளை அந்த பிரமுகர்கள் யார் என தெரிந்திருந்தால் இது சம்பந்தமான மேலும் பல தகவல்கள் வெளிப்பட்டிருக்குமே.. ஆனால் இப்படி அவசர கதியில் கட்சியில் இருந்து நீக்கி விட்டதால், எல்லாமே போச்சே... அது ஏன் இவ்ளோ அவசரம்? இப்போ கடைசியில அந்த பிரமுகர்களின் யார், என்ன பின்னணி, காரணங்கள் எதுவுமே வெளிவராமல் அப்படியே அமுங்கி போய்விட்டதே" என்று பொள்ளாச்சியின் பெரும்பாலான மக்கள் குமுறுகிறார்கள்.