திமிறிய ஷிவானி.. ஆதரவு கரம் நீட்டிய வெறும் 3 பேர்.. உறைந்து போன ரசிகர்கள்.. இது பிக்பாஸ் கூத்து!
சென்னை: கேப்டன் போட்டியில் வெறும் 3 ஓட்டுக்கள் மட்டுமே ஷிவானிக்கு விழுந்த அந்த அதிர்ச்சியில் இருந்து அவரது ரசிகர்கள் எழவே இல்லை.
பிக்பாஸ் ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக பேசப்பட்டு வருகிறது.. எந்த சீசனும் போல் இல்லாமல் இந்த சீசனிலேயே விறுவிறுப்பு 2-ம் நாளே ஆரம்பித்துவிட்டது. தினமும் ஒளிபரப்பாகும் புரோமோவும் பரபரப்பை கூட்டி வந்து, பிக்பாஸ் அல்லாத ரசிகர்களையும் தன்பக்கம் இழுத்து வந்து கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சி தொடங்கி ஒருவாரம் ஆன நிலையில், கமல் வழக்கம்போல் வந்து அரசியல் நெடியை தெறிக்க விட்டு சென்றார்.. வீட்டின் கடந்த வாரம் கேப்டனாக ரம்யா பாண்டியனை, நேரடியாகவே பிக்பாஸ் அறிவித்திருந்தார்.. எனவே, அடுத்த வாரத்திற்கான அதாவது இந்த வாரத்துக்கான கேப்டன் போட்டி தேர்வானது.. அதில், ஷிவானிக்கு வெறும் 3 ஓட்டுக்கள் மட்டுமே விழுந்தது.
அப்போது ஷிவானி பெயரை கமல் சொன்னதும், வெறும் 3 பேர்கள் மட்டுமே கையை தூக்கி உள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்தி பெயரை சொன்னதுமே எடுத்த எடுப்பிலேயே 6 பேர் கையை தூக்கிவிட்டனர்.. இதை பார்த்த கமல், ஓட்டு போடும்போது யோசித்து ஓட்டு போடுங்க, ஓட்டு போட்ட பிறகு வருத்தப்படக் கூடாது என்று சொல்லும் புரோமோ நேற்றெல்லாம் டிரெண்டிங் ஆனது.. ஆனால், ஷிவானி பெயரை கமல் சொன்னதுமே வெறும் 3 பேர் மட்டுமே கையை தூக்கினர்.. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
திமுக கூட்டணி சிதறும்.. அங்குள்ள கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வருவது நிச்சயம்.. கடம்பூர் ராஜூ பேட்டி
நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே ஷிவானிக்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.. இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ்களும் லட்சக்கணக்கில் உள்ளனர்.. ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வீட்டில் ஷிவானி அணியும் டிரஸ்களையும், மேக்கப்பையும், இளசு கூட்டம் ஒன்று பெரிதும் ரசித்து பார்க்கும்.
இந்த வாரம் ஷிவானிக்கு கேப்டன் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. ஆரம்பத்தில் சற்று கெத்து காட்டி வந்த ஷிவானிக்கும் கொஞ்சம் ஷாக்தான்.. காரணம், வீட்டில் அவர் யாருடனும் சரியாக பேசுவதில்லை, பழகுவதில்லை என்ற பெரிய குற்றச்சாட்டு இருக்கிறது.. இதை ஷிவானியே ஒத்துக் கொண்டிருந்தாலும், நேற்று அவரது முகம் சற்று வாட்டத்திலும், அதிர்ச்சியிலும் இருக்கத்தான் செய்தது.. அதனால், சோஷியல் மீடியாவில் ஷிவானி ரசிகர்கள் வெறித்தனமாக ஆதரவு கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.