மொத்த முதுகும் அப்படியே தெரிய.. தெறிக்க விட்ட ஷிவானி.. ஆனால் முகத்தில் வடிந்த சோகம்.. என்னாச்சு!
ஷிவானி பாலாஜி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது
சென்னை: முதுகும், தோள்பட்டையும் அப்படியே தெரிய பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்றெல்லாம் சுற்றிக் கொண்டிருந்த ஷிவானியின் போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Recommended Video
பிக்பாஸ் சீசனை பொறுத்தவரை, மக்களிடையே பிரபலமான நபர்கள்தான் போட்டியாளர்களாக உள்ளே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு நேரடியாகவே டிவி மூலம் ரசிகர்கள் இருந்தாலும், ஷிவானி, அனிதா, சனம் போன்றோருக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் ஃபாலோயர்ஸ் அதிகம் உண்டு.
ஷிவானி விட்டதை நல்லாவே பிடிச்சுட்டீங்க போங்க.. கலகலக்கும் ஸ்ரீரஞ்சனி!
டிரஸ்கள்
அதிலும் ஷிவானிக்கு இதில் எக்கச்சக்கம்.. குறிப்பாக இவர் அணியும் டிரஸ்களுக்கு ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.. இதையேதான் பிக்பாஸ் வீட்டில் இவரிடம் ரசிகர்கள் எதிர்பார்த்து, ரசித்து வருகின்றனர்.. அந்த வகையில் தினமும் குட்டியாக டிரஸ் அணிகிறார்.. பார்க்க க்யூட்டாகவே உள்ளது.
சின்ன பெண்
போட்டியாளர்களில் இருப்பதிலேயே சின்ன பெண் என்பதால், இதை யாரும் பெரிதாக்குவதில்லை.. நேற்றுகூட இவர் அணிந்த டிரஸ் அப்படித்தான் இருந்தது.. அப்பட்டமாக தோளும், முதுகும் தெரியும்படி ஒரு டிரஸ் அணிந்திருந்தார்.. இதையே வேறு யாராவது போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்காது.. ஷிவானிக்கு அது சூப்பராக பொருந்தியது. இந்த போட்டோக்கள்தான் இப்போதும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
நாமினேட்
ஆனால், ஏனோ நேற்றெல்லாம் அப்செட்டாகவே இருந்தார்.. ஒருவேளை இதற்கும் பாலாஜியே காரணமாக இருக்கும் என்று தெரிகிறது.. இந்த வார நாமினேஷன் ப்ராசஸில் ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்ய சொன்ன காரணங்களை பிக் பாஸ் வெளிப்படையாகவே சொல்கிறார்... ஆனால் யார் என்ன சொன்னர்கள் என்பதை மட்டும் அவர் சொல்லவே இல்லை.. அதன்படி, நான்ஸிங்க்ல போறாங்க, சிடுமூஞ்சி, காதல் கண்ணை மறைக்குறது" போன்ற காரணங்களை முன்வைத்து நாமினேஷன் நடந்தது என்றார்.
காதல்
இதைக்கேட்ட பாலா, "எல்லாரும் கேட்டுக்குங்க.. இங்க காதல்லாம் எவனும் பண்ணல... ஏதாவது டாக் இருந்து என் காதுக்கு வந்தா, நான் ஏதாவது கேட்பேன்" என்கிறார்.. பிறகு ஷிவானியிடம் "ஒருவேளை லவ் வந்தா உன்கிட்ட சொல்லுறேன் சரியா?.. வராது... அப்படி வந்தா சொல்லுறேன்" என்கிறார். அப்போது ஷிவானி முகம் மாறுகிறது.
சோகம்
இதற்கு பிறகு இருவரும் பேசும்போதுகூட, ஏன் என்னிடம் சரியாக பேசவில்லை, என் கையில் ரத்தம் வந்ததுகூட தெரியாதா என்று பாலாஜியிடம் உரிமையாக கோபப்படுகிறார் ஷிவானி.. அதற்கும் பாலாஜி எடுத்தெறிந்துதான் பேசுகிறார்.. ஏதோ ஷிவானியை புரோமோவுக்காகவும், கண்டன்ட்டுக்காகவும் மட்டுமே பாலாஜி பயன்படுத்தி கொண்டிருக்கிறாரோ என்றும் நினைக்க தோன்றுகிறது.