பிக்பாஸ் நிகழ்ச்சி காஸ்ட்லியான புரணி பேசும் நிகழ்ச்சி.. சீமான் கடும் விமர்சனம்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு காஸ்ட்லி புரணி பேசும் நிகழ்ச்சி என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
Recommended Video
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 3 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு விட்டது. தற்போது 4ஆவது சீசன் எப்போது நடத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் பிக்பாஸ் 4ஆவது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது.
யாரும் கூட்டு சேர கூடாது.. ஓநாய் வீரர்கள் மூலம் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் சீனா.. புதிய பிக்பாஸ்!
நிகழ்ச்சி
இந்த சீசனில் யார் யார் பங்கு கொள்ள போகிறார்கள், நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகிறது போன்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். அதற்குள்ளாகவே பிக்பாஸில் இந்த போட்டியாளர்கள் வருவார்கள் என யூகங்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. கொரோனா நேரத்தில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.
கமல்
இதனால் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியின் போதும் வாராவாரம் கமல் பங்கேற்பின்போதும் குறைந்த அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
புரணி பேசுவது
அப்போது அவரிடம் பிக்பாஸ் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், புரணி பேசுவதை அதிக மக்கள் விரும்புவதாகவே நான் நினைக்கிறேன். புரணி பேசுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று ஆகும். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு காஸ்ட்லி புரணி பேசும் நிகழ்ச்சி என சீமான் விமர்சித்திருந்தார்.
டிஆர்பி
பிக்பாஸ் நிகழ்ச்சியை சீமான் விமர்சிப்பது இது முதல்முறையல்ல. இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே தனது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார். கடந்த சீசனில் டிஆர்பி ரேட்டிங்கிற்காக ரூல்ஸ்களை மீறி எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார் மீண்டும் நிகழ்ச்சிக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.