விஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு
Recommended Video
சென்னை: நடிகர் விஜயின் கருத்துக்கள் நியாயமானவை என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
பிகில் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், சுபஸ்ரீ மரணம் உள்ளிட்ட சில தமிழக நடப்பு குறித்து பேசினார். ஆளும் அரசை கண்டிக்கும் தொனியில் அவரது பேச்சு இருந்தது.
இதுகுறித்து, டிவி சேனலிடம் பேசிய தங்கத்தமிழ் செல்வன் கூறியதாவது: சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்த விவகாரத்தில், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பிளக்ஸ் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறு. மாநில அரசின் அவல நிலையை தைரியமாக சொல்லியதற்கு விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்கேயுமே பிளக்ஸ் மற்றும் கட்அவுட்கள் வைக்கக்கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, முப்பெரும் விழாவையொட்டி திருவண்ணாமலையில் ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்த திமுக பேனர்கள் முற்றிலும் அகற்றப்பட்டது. இப்படித்தான் ஒரு தலைமை இருக்க வேண்டும். ஆனால் சம்மந்தம் இல்லாமல், அடுத்தவர் மீது நடவடிக்கை எடுப்பது தேவையற்றது.
அரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு
இதைத்தான் வெளிப்படையாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். அதை வெளிப்படையாக சொன்னதை நான் வரவேற்கிறேன். அரசு செய்யக்கூடிய தவறுகளை கண்டிக்கக் கூடிய துணிச்சல் விஜய்க்கு இருக்கிறது என்பதற்காக நான் பாராட்டுகிறேன். இவ்வாறு தங்கத்தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.