சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாம்பரத்தில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 2 பேர் பலி!

சென்னை தாம்பரத்தில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தாம்பரத்தில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் அருகே பெருங்களத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இரண்டு பைக்குகள் எதிர் எதிர்திசையில் வந்துள்ள போது விபத்து நிகழ்ந்துள்ளது.

 Bike accident in Chennai Tambaram kills 2 people

நேற்று இரவே இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. பைக்கில் வந்த ஒரு நபர் அதிக அளவில் காயத்திற்கு உள்ளாகி இருந்தார். இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.

இன்னொரு நபர் பைக் விபத்தில் எங்கே விழுந்தார் என்று தெரியாமல் போலீசார் தேடி வந்தனர். அவரின் உடல் இன்று அதிகாலைதான் கண்டுபிடிக்கப்பட்டது. காலையில் அருகே இருந்த காட்டுப்பகுதியில்தான் அந்த இளைஞரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரது உடலும் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் சென்னையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Bike accident in Chennai Tambaram kills 2 people yesterday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X