கறி கடை வைத்திருக்கும் பெரியதுரை மீது துப்பாக்கிசூடு.. பலத்த காயம்.. ரத்தம் கொட்டி.. நெல்லை பரபரப்பு
பாஜக பிரமுகரை துப்பாக்கியால் சுட்டதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நெல்லை: கறி கடை வைத்திருக்கும் பாஜக பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பெரியதுரை.. இவருக்கு 32 வயதாகிறது.. இவர் அதே பகுதியில் தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்து கறிக்கடை நடத்தி வருகிறார்.. இவர் பாஜகவின் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.
கறி கடை வைத்திருக்கும் பகுதியில் வசித்து வருபவகிறார் ஒரு முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி.. இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.. இந்த கறிக்கடையை வைத்துதான் நிறைய பிரச்சனை வந்திருக்கிறது.
கறிக்கடையின் கழிவுகளை, அந்த ஜெபமணியின் வீட்டுக்கு அருகே கொட்டுவது தொடர்பாக பலமுறை தகராறு வந்துள்ளது.. எப்போதெல்லாம் இவர்களுக்குள் தகராறு வருகிறதோ அப்போதெல்லாம் துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என்று ராணுவ வீரர் மிரட்டுவாராம்.
இந்த நிலையில்தான் இன்று ஜெபமணி சிகரெட் பிடிக்கவும், அது தொடர்பாக பெரியதுரையுடன் தகராறு வெடித்துள்ளது.. வார்த்தை மோதலும் ஏற்பட்டுள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஜெபமணி, வீட்டுக்குள் வேகமாக சென்று, துப்பாக்கியை எடுத்து வந்து பெரியதுரையை நோக்கி சுட்டுவிட்டார்.. இதில் பெரியதுரையின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி அலறினார்.
இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, உடனடியாக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.. தகவலறிந்த பெருமாள்புரம் போலீசார் ஜெபமணியை கைது செய்து, அந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.. தற்போது பெரியதுரைக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு வருகின்றனர்.. அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.