தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பாஜக டிவிட்.. ஜவாஹிருல்லா கண்டனம்.. காவல்துறைக்கு கோரிக்கை
சென்னை: தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றி இழிவாகவும் அருவருக்கத்தக்கவாறும் தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரை பற்றி தமிழக பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த பதிவுக்கு அமைச்சர் ஜெயக்குமார், திமுக தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உதயநிதி ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பதவினை பாஜக நீக்கியது.
இந்நிலையில் தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றி இழிவாகவும் அருவருக்கத்தக்கவாறும் தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுயமரியாதை அரக்கனை இந்த சனாதன சாக்கடைகளால் ஒன்றும் செய்ய முடியாது.. பாஜக மீது உதயநிதி பாய்ச்சல்
சமூக இழிவுகளை அகற்றவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் தமிழகத்தில் அயராது பணியாற்றிய தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த டிவிட்டர் பதிவு உள்ளதாக ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
இந்த பதிவுக்குக் காரணமாக இருந்த தமிழக பாஜக மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.