ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு வரவேற்பு.. அடுத்து தயாநிதி மாறன்தானா?- எச்.ராஜா கேள்வி
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்று, பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
அன்பகத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நீதிபதி பதவிகளை பெற்று தந்ததில், திமுக முக்கிய பங்காற்றியதாக கூறினார். மேலும் ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தையை தெரிவித்தார்.
RS Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிரடி கைது.. வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது
இது தொடர்ந்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான், எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?. என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தலைமைச் செயலாளரை சந்தித்த திமுக எம்பிக்கள் குழு தங்களை அவர் உரிய வகையில் மரியாதையாக நடத்தவில்லை என்று புகார் கூறியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், தங்களை தாழ்த்தப்பட்டவர் போல தலைமைச் செயலாளர் நடத்தியதாக தெரிவித்தார். இதற்கு திமுகவின் தோழமை கட்சிகளே, அதிருப்தி வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இந்த பேச்சிற்கு வருத்தம் தெரிவிப்பதாக தயாநிதிமாறன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.