அவரும் ரொம்ப நாளா வர்றேன்னு சொல்லிக்கிட்டுதான் இருக்காரு.. எல்லாம் நாடகம்.. ரஜினியை தாக்கிய சு.சாமி
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன் என கூறிக்கொண்டு இருப்பது நாடகம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணி சாமி அவ்வப்போது நடிகர் ரஜினிகாந்தை சாடி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ரஜினி ஒரு படிக்காத முட்டாள் என்றும் அவன், இவன் என்றும் ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கினார் சுப்பிரமணிய சாமி.
இந்நிலையில் சுப்பிரமணிய சாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறாரே அவர் பாஜகவுக்கு ஆதரவளிப்பாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
எல்லாம் நாடகம்
அதற்கு பதிலளித்த சுப்பிரமணிய சாமி, ரஜினியும் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன் என கூறிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இதுவரை வரவில்லை. எல்லாம் நாடகம் என விமர்சித்தார் சுப்பிரமணிய சாமி.
ரஜினி பாஜகவுக்கு ஆதரவா?
மேலும் ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறார் என்றால் மும்மொழி கொள்கை பற்றி பேசவேண்டும். சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என்று கூறவேண்டும்.
ரஜினி என்ன பேசுகிறார்?
ஆனல் ரஜினி எதை பற்றியுமே வாயே திறக்கவில்லைலை. அவர் பாஜகவுக்கு ஆதரவாக என்ன பேசுகிறார்? எதை வைத்து ரஜினி பாஜகவுக்கு ஆதரவளிப்பார் என கூறுகிறார்கள் என்று தெரியவில்லை என்றார் சுப்பிரமணிய சாமி.
ராஜினாமா செய்ய வேண்டும்
மேலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் தனித்து போட்டியிட வேண்டும், பாஜகவின் தோல்விக்கு பொறுப்பேற்று பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணிய சாமி கூறினார்.