பாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக!
பாஜகவுக்கு ஆதரவான செயல்களில் சசிகலா ஈடுபடுவதுபோல தெரிகிறது
Recommended Video
சென்னை: பாஜகவின் அடுத்தடுத்த மூவ்கள் என்னவென்று தெரியாமல் மிரண்டு போயுள்ளது அதிமுக தரப்பு. இதற்கு காரணம் சசிகலா புஷ்பாதான் என்று சொல்லப்படுகிறது.
தமிழக அரசியலில் அடிக்கடி சூறாவளி வீசும் என்றால், அங்கே சசிகலா புஷ்பாவின் பெயரும் கட்டாயம் அடிபடும் என்றுதான் அர்த்தம். அப்படித்தான் கடந்தகால சம்பவங்களும் அமைந்தன.
இப்போது மீண்டும் சசிகலா புஷ்பாவின் பெயர் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. மோடி பிரதமராக வந்து 6-வது வருஷம் தொடங்கியுள்ளது. இதுவரை இல்லாத அதிசயமாக அவரை புகழ்ந்து தள்ளி உள்ளார் இவர்.
மோடி ஆட்சி
"தமிழகத்தை பொறுத்தவரை, மோடியின் சமூகநலத் திட்டங்கள் சரியாக கொண்டு வந்து சேர்க்கப்படவில்லை. இதன் மூலம் பலகோடி பேர் பயனடைந்திருந்தாலும், அவர் மீது தவறான புரிதல்தான் தமிழ்நாட்டில் உள்ளது. இதை இனி என் நடவடிக்கையால் மாற்றுவேன். மோடி அரசு மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதுபோலதான் என் செயல்பாடுகள் இருக்கும். தமிழகத்தில் மோடி ஆட்சிதான் தேவை" என்று மானாவாரியாக புகழ்ந்துள்ளார்.
உள்ளடி வேலை?
இவரது இந்த பேட்டியை பார்த்துதான் அதிமுக தலைமை ஆடிப்போய் உள்ளது. திடீரென பாஜகவையும், மோடியையும் சசிகலா புஷ்பா புகழ என்ன காரணம்? கட்சி மாற போகிறாரா? அல்லது கட்சிக்குள்ளிருந்தே உள்ளடி வேலை பார்க்க போகிறாரா? என தெரியவில்லை. ஜெ. இறந்துகூட இவரை அதிமுக திரும்பி பார்க்காதது உண்மைதான். ஒருவேளை இதனை மனதில் வைத்து ஏதாவது ஏடாகூட வேலையில் இறங்க போகிறாரா என்பதும் புரியாத புதிராக உள்ளது.
எம்பிக்கள்
இப்படி பாஜகவுக்கு தடாலடியாக சப்போர்ட் பண்ண என்ன காரணமாக இருக்கும் என்று வெளிப்படையாக தெரியாவிட்டாலும், ஓரளவு தகவல்களும் கசிய ஆரம்பித்துள்ளன. அதிமுக ராஜ்யசபா எம்பிக்கள் 9 பேரையாவது வளைத்து பிடித்து பாஜக பக்கம் கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும் என்பதுதானாம் அது. அதில் 4 பேரிடம் பேசி கொடுத்த அசைன்மென்ட்டை கிட்டத்தட்ட முடித்துவிட்டாராம். இதற்குதான் சசிகலா புஷ்பாவை வைத்து ஆட்டத்தை துவங்கி உள்ளது பாஜக தரப்பு.
சிக்கல்கள்
உள்ளூர் அதிமுகவில்தான் ஏகப்பட்ட குழப்பங்களும், சர்ச்சைகளும் என்றால், டெல்லியிலும் சசிகலாவின் அதிரடிகளால் சிக்கல் விழ நிறையவே வாய்ப்பு உள்ளது. இவ்வளவு கால டெல்லி வாசத்தில், ஓரளவு அறிமுகமும், அனுபவமும் பெற்றிருப்பவர் சசிகலா புஷ்பா. தவிர, டெல்லி தலைவர்களின் தொடர்பையும் இழக்காமல் தக்க வைத்து கொண்டு வருவதால், இவரை சரியாக பயன்படுத்தி காய் நகர்த்தி வருகிறது பாஜக!
தெலுங்கு தேசம் பாணி
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அவருக்கு எதிராக ராஜ்யசபாவில் கொந்தளித்தவர் சசிகலா புஷ்பா. அம்மா என்னை அடித்தார் என்று அவர் அழுது புலம்பியதை நாடே வேடிக்கை பார்த்தது. அதன் பிறகு அதிமுக பிளவுபட்டபோது ஓபிஎஸ் பக்கம் ஆதரவு தெரிவித்து அவரை நேரில் வந்தும் சந்தித்து விட்டுச் சென்றார். இந்த நிலையில் தற்போது தெலுங்கு தேசம் பாணியில் அதிமுகவில் பள்ளம் தோண்டும் வேலையில் சசிகலா புஷ்பாவுக்கும் பங்கிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
குழப்பம்
அடுத்தடுத்து வரும் சவால்களால் எடப்பாடி தரப்புசோர்ந்து போய் நிற்கிறதாம். எதை சமாளிப்பது, எப்படி தேறுவது என்ற குழப்பத்தில் உள்ளதாம் எடப்பாடி தரப்பு. இருக்கும் 12 ராஜ்யசபா எம்பிக்களிடமும் சமரசம் பேச போகிறாரா? அல்லது பாஜகவின் ட்விஸ்ட்களுக்கு பதிலடி தர போகிறாரா? என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.