ரஜினி வீட்டுக்கு வந்த மாதிரியே விஜய் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்.. புரளி என கண்டுபிடிப்பு!
சென்னை: நடிகர் விஜயின் சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து நள்ளிரவில் போலீஸார் சோதனை நடத்தினர்.
சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய்க்கு சொந்தமாக வீடு உள்ளது. விஜய் பனையூரில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு காவல் துறை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு ஒருவர் பேசியுள்ளார்.
அப்போது அந்த நபர் சாலிகிராமத்தில் உள்ள விஜயின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் விஜய் வீட்டுக்கு சென்று அங்கு சோதனை நடத்தினர்.
சாத்தான்குளம் மரண வழக்கு.. 5 போலீசாரும் திடீரென மதுரை சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்? என்ன நடந்தது?
விழுப்புரம்
சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் விழுப்புரத்திலிருந்து போன் வந்தது தெரியவந்தது.
மிரட்டல்
இதையடுத்து விழுப்புரம் போலீஸார் மூலம் விசாரணை நடத்தியதில் அந்த எண் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள புவனேஸ்வரியின் செல்போன் என தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகன் இதுபோல் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
பெற்றோர்
இதையடுத்து போலீஸார் அந்த நபரின் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அங்கு நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என தெரியவந்தது.
எச்சரிக்கை
காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த அழைப்பு கடலூர் மாவட்டத்தில் இருந்து வந்தது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் 14 வயது சிறுவன் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருடைய பெற்றோரையும் போலீஸார் எச்சரித்தனர்.
பாதுகாப்பு
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்ற தகவலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே விஜய் வசிக்கும் நீலாங்கரை பங்களாவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.