அதிகாலையில் வந்த மர்ம கால்.. முதல்வர் பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
தமிழக முதல்வர் பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது தேர்தல் நேரம். இதனால் தமிழகம் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. தலைவர்கள், அமைச்சர்கள், வேட்பாளர்கள் எல்லோருக்கும் இப்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் முதல்வர் பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தொகுதி தமாகா வேட்பாளர் யார்? இன்று அறிவிக்கிறார் ஜி.கே வாசன்!
போன் வந்தது
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் கால் செய்து இருக்கிறார். தமிழக முதல்வர் பழனிச்சாமி வீட்டில் வெடிகுண்டு இருக்கிறது என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து சென்னை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக முதல்வரின் இல்லத்திற்கு சென்றனர்.
சோதனை நடந்தது
இதையடுத்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டின் போலீசார் சோதனை நடத்தினார்கள். அதேபோல் முதல்வரின் கார்கள், வீட்டின் பின்புறம், அருகாமையில் இருக்கும் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள். மோப்ப நாயின் உதவியுடன் இந்த சோதனை நடந்தது.
இல்லை என்று கண்டுபிடிப்பு
சுமார் 1 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மிரட்டல் வெறும் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
வலைவீச்சு
தற்போது இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகிறார். அவர் செய்த போன் எண்ணை வைத்து போலீசார் அவரை தேடி வருகிறார்கள். இவரின் பின்புலம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று தமிழக போலீஸ் கூறியுள்ளது.