வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்... சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிரட்டல்
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற சிவதலங்களில் ஒன்று. இந்த கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சைதாப்பேட்டை முகமது ஹனீப் பாகவி என்பவர் பெயரில் கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலை வெளிநாட்டு வெடிகுண்டுகளை வைத்து தகர்ப்போம் எனக் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து, உடனடியாக கோவில் நிர்வாகத்தினர் மைலாப்பூர் போலீசில் புகார் அளித்தனர்.. இதையடுத்து போலீசார் மோப்ப நாய்களுடன் சென்று அங்கு சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
சென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவியை வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்
இதையடுத்து மிரட்டல் கடிதத்தை அனுப்பியவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.