குடியுரிமை சட்ட திருத்தம்: அரசியல் கட்சிகளைக் கண்டித்து சென்னையில் பாஜக போராட்டம்
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதைக் கண்டித்து சென்னையில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன. டெல்லி, உ.பி. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளன.
கர்நாடகாவின் மங்களூருவிவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். உத்தரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஒருவர் உயிரிழந்தார்.
இன்றும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் டிசம்பர் 23-ந் தேதி அனைத்து எதிர்கட்சிகளின் பிரமாண்ட பேரணி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் போராட்டத்தைக் கண்டித்து சென்னையில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஐ.நா. பொதுவாக்கெடுப்பு- நாடாளுமன்றத்தை அவமதிப்பதா? மமதாவுக்கு ஸ்மிருதி இரானி கண்டனம்
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா உள்ளிட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.