அரசியல் சாசனத்திற்கே எதிரான சட்டம்.. உச்சநீதிமன்றம் செல்லப்போகிறது வழக்கு.. ப.சிதம்பரம் ட்வீட்
சென்னை: குடியுரிமை சட்ட (திருத்த) மசோதா என்பது, அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அது லோக்சபாவில் நிறைவேறியிருந்தாலும், போராட்டம் உச்சநீதிமன்றத்திற்கு மாறும் என்றும் அவர் கூறினார்.
CAB is unconstitutional. Parliament passes a Bill that is patently unconstitutional and the battle ground shifts to the Supreme Court.
— P. Chidambaram (@PChidambaram_IN) December 10, 2019
Elected Parliamentarians are abdicating their responsibilities in favour of lawyers and judges!
"குடியுரிமை சட்ட (திருத்த) மசோதா (CAB) அரசியலமைப்பிற்கு விரோதமானது. நாடாளுமன்றம் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு மசோதாவை நிறைவேற்றுகிறது. எனவே சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு பொறுப்பை கொடுத்துவிட்டு, தங்கள் பொறுப்புகளை கைவிட்டுள்ளனர்" என்று ப.சிதம்பரம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
That is the price we pay for giving a party a brute majority that it uses to trample over the wishes of the States and the People.
— P. Chidambaram (@PChidambaram_IN) December 10, 2019
ஒரே கட்சிக்கு மிருகத்தனமான பெரும்பான்மையை வழங்கியதற்காக நாம் செலுத்தும் விலை இதுதான், மாநிலங்கள் மற்றும் மக்களின் விருப்பங்களை மிதிக்க இது பயன்படுத்துகிறது. இவ்வாறு மற்றொரு ட்வீட்டில் சிதம்பரம் கூறியுள்ளார்.
When the voters will vote for a candidate when he is with the Congress and will
— P. Chidambaram (@PChidambaram_IN) December 10, 2019
vote for him when he defects to BJP,
can we say that Indian politics has acquired a transcendence & formlessness that makes India=Heaven.
காங்கிரசுடன் இருக்கும்போது ஒரு வேட்பாளருக்கு வாக்காளர்கள் வாக்களிப்பார்கள், அவரே தகுதியிழந்து பாஜகவில் சேர்ந்து பிறகு போட்டியிடும்போதும், அவருக்கே வாக்களிப்பார்கள் என்றால், இந்திய அரசியல், இந்தியாவை சொர்க்கமாக மாற்றும் உருவமற்ற தன்மையைப் பெற்றுள்ளது என்று நாம் கூற முடியுமா? என்று மற்றொரு ட்வீட்டில் கர்நாடகாவில் பாஜக பெற்ற வெற்றி பற்றி குறிப்பிட்டுள்ளார் சிதம்பரம்.