ஜக்கி வாசுதேவின் பைக் பயணத்தை காட்டமாக விமர்சித்த இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா!
சென்னை: ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மண் வளம் காப்போம் என்ற முழக்கத்துடன் தொடங்கி இருக்கும் சர்வதேச பைக் பிரச்சார சுற்று பயணத்தை முட்டாள்தனமானது என்று கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா கடுமையாக சாடியுள்ளார்.
ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் நவராத்திரி விழாவை தொடர்ந்து மண் வளத்தை காப்பது தொடர்பாக உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பைக் பயணத்தை தொடங்கி இருக்கிறார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து புறப்பட்டு 30,000 கி.மீ. தூரம் பயணித்து இந்தியா வர இருக்கிறார் ஜக்கி வாசுதேவ்.

இந்திய அளவிலும் உலகளவிலும் ஏராளமான பக்தர்களை கொண்டுள்ள ஜக்கி வாசுதேவ் இயற்கையை காக்க பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். நதிநீர் இணைப்பை வலியுறுத்தி RALLY FOR RIVERS என்ற பிரச்சாரத்தை தொடங்கிய ஜக்கி, காவிரி கரையோரம் 242 கோடி மரங்களை நட்டு காவிரியை மீட்போம் எனக்கூறி காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தையும் நடத்தி பணம் வசூலித்தார். இதன் தொடர்ச்சியாகவே இந்த பயணத்தையும் தொடங்கியுள்ளார் ஜக்கி வாசுதேவ்.
இதனிடையே லண்டனில் மண் வளம் காப்போம் பிரச்சார பயணத்தை தொடங்கி இருக்கும் ஜக்கி வாசுதேவின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, "இது எவ்வளவு முட்டாள்தனமானது. பலரும் இந்த முட்டாள்தனத்தை வாங்குகின்றனர். ஏற்கனவே இவர் நடத்திய மரம் நடும் நாடகத்தை விட்டுவிட்டு இதை தொடங்குகிறார். எந்த ஒரு சுதந்திரமான அமைப்பாவது இதுகுறித்து சரிபார்த்துள்ளதா? எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்."











Click it and Unblock the Notifications