சென்னை ஏர்போர்ட் எதிரே பரபரப்பு.. மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த கார்!
Recommended Video
சென்னை : சென்னை விமானநிலைய மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால், பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.
சென்னை விமான நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக ஜிஎஸ்டி சாலை மற்றும் விமான நிலையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
சென்னை விமான நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்தது. அதனை அடுத்து காரின் உரிமையாளர் இறங்கி வெளியே வந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த காரில் எத்தனை பேர் பயணித்தார்கள் போன்ற விவரங்கள் தெரிய வரவில்லை.
கிண்டி மற்றும் தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தீவிபத்தின் காரணமாக விமான நிலையம் செல்லும் பலமணி நேரம் பரபரப்பு நிலவியது.