சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தயவு தாட்சணையே கூடாது தாட்சாயினிக்கு.. செஞ்ச வேலையை பாருங்க.. சிசிடிவி வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஜே ஜே நகர் பகுதியில் உள்ள நகைக்கடையில் பெண் ஒருவர் 3 சவரன் நகையை லாவகமாக திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அந்த பெண்ணை கைது செய்த போலீசார் உடந்தையாக இருந்த கணவனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை முகப்பேர் வளையாபதி சாலை உள்ள லஷ்மி ஜூவல்லரியின் உரிமையாளர் ப்ரீத்தம் குமார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக நகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 26 ஆம் தேதி 3 மணி அளவில் கடையில் பணிபுரியும் ஊழியரான கைலாஷ் என்பவர் பெண் வாடிக்கையாளருக்கு 3 சவரன் எடை கொண்ட ஆறு நகைகளை காண்பித்து வைத்துள்ளார்.

தமிழகம் உட்பட 19 மாநிலங்கள்-43 மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் பிரமாண்ட யாத்திரை- பா.ஜ.க. மெகா ப்ளான்தமிழகம் உட்பட 19 மாநிலங்கள்-43 மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் பிரமாண்ட யாத்திரை- பா.ஜ.க. மெகா ப்ளான்

எஸ்கேப்

எஸ்கேப்

அதில் ஒன்றை தேர்வு செய்த அந்தப் பெண்மணி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து வருவதாக சென்றுவிடும் நேரத்தில் ஆறு செயினில் ஒரு செயினை லாவகமாக மறைத்து திருடிக்கொண்டு சென்று விட்டார். இது அப்போது அங்கிருந்தவர்களுக்கு தெரியவில்லை.

திருடிய பெண்

திருடிய பெண்

பின்னர் நகைகளை எண்ணி பார்க்கும் போது 3 சவரன் நகை ஒன்று குறைவது தெரியவந்தது. இது தொடர்பாக கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தாட்சாயினி (வயது 47) என்கிற பெண் ஒருவர் மறைத்து வைத்து எடுத்துக் கொண்டு செல்வது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

சிறையில் அடைப்பு

இது தொடர்பாக சென்னை ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் ப்ரீத்தம் குமார் புகார் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததுடன், நகைகளை திருடிய தாட்சாயினி என்ற பெண்ணையும் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் சந்திரகுமாரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

திருடியுள்ளார்

திருடியுள்ளார்

குறிப்பாக தாட்சாயினி மீது ஏற்கனவே ஆவடி, பூந்தமல்லி, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு , பூக்கடை, உள்ளிட்ட காவல் நிலையங்களில் இதுபோன்ற நகைகளை திருடிய செயல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளது. ஒவ்வொரு முறை வெளியே வரும் போது நகைகளை திருடுவதையே வேலையாக வைத்திருந்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

English summary
A CCTV footage has emerged of a woman stealing a 3 savarn of jewelery from a jewelery shop in the JJ Nagar area of Chennai. The police who arrested the woman also arrested and imprisoned her accomplice husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X