சென்னை வந்தார் பியூஷ் கோயல்.. விஜயகாந்தை நேரில் சந்தித்த பின் உறுதியாகும் கூட்டணி
சென்னை:தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்ய மத்திய அமைச்சரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக யார், யாருடன் கூட்டணி வைத்து களத்தில் இறங்குகிறது என்பது ஓரளவு இறுதியாகி விட்டது. கூட்டணியில் பாமக இணைந்து 7 தொகுதிகளை அள்ளியிருக்கிறது.
தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவாகாமல் இருந்து வருகிறது. அதனை உறுதி செய்ய மத்திய அமைச்சரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.
அவர் முதலில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ள விஜயகாந்தை அவர் சந்திக்கிறார்.
அதன் பின்னர் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே சுதீசை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்கிறார்.
இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் ஆகியோரும் செல்ல உள்ளனர். அதன்பின்னரே.. கூட்டணியில் முடிவான தொகுதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.