ஒரு ஹேப்பி நியூஸ்.. குமரி கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உட்பட 12 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே கத்திரி வெயில் போல, தமிழகம் முழுக்க கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஆங்காங்கு கடுமையான அனல் காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில்தான் காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுவரைக்கும் 3 கல்யாணம்.. 4 கொலை.. கொடூர வில்லத்தனம்.. மிரள வைக்கும் பிரியமானவள்!
நாளை முதல் அனல் காற்று வீசுவது குறைய தொடங்கும் என்றும் மகிழ்ச்சியான ஒரு செய்தியை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல், அதனை ஒட்டியுள்ள பகுதி, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.