'காஞ்சனா-3' பட ரஷ்ய நடிகைக்கு பாலியல் தொல்லை.. இச்சைக்கு இணங்குமாறு மிரட்டிய நடிகர் கைது
Recommended Video
சென்னை: காஞ்சனா- 3 படத்தில் நடித்த ரஷ்ய நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விளம்பர பட நடிகரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் ரஷ்யாவைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா- 3 படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் அளித்தார்.
வைரலான இன்பினிட்டி பூல் போட்டோ.. நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட தம்பதி!
வாட்ஸ் அப்பில் படம்
அந்த புகார் மனுவில், பல விளம்பரங்களில் நடித்துள்ள ரூபேஷ்குமார்(26) என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் என்னை விளம்பர படங்களில் நடிக்க வைப்பதாக கூறி என்னை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார்.
மிரட்டினார்
அதை வைத்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அவருடைய இச்சைக்கு இணங்காவிட்டால் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி வருகிறார். எனவே ரூபேஷ்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.
வழக்கு பதிந்த போலீஸ்
இந்த புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதன்படி மத்திய சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
நடிகர் கைது
அதன் பின்னர் புகாருக்கு உள்ளான விளம்பர பட நடிகர் ரூபேஷ் குமார் நேற்று முன்தினம் இரவு கைது செய்ப்பட்டார். விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து விளம்பர பட நடிகர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.