மசாஜ் பார்லர் நடத்த லஞ்சம்.. பாலியல் தொழில் செய்ய கட்டாயம்.. சென்னை உதவி ஆணையர் கைது
சென்னை: மசாஜ் பார்லர் நடத்த லஞ்சம் பெற்றுக் கொண்டு அதில் பாலியல் தொழிலை செய்ய உதவி ஆணையர் வற்புறுத்தியதை அடுத்து அவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
சென்னை அசோக்நகர் உதவி காவல் ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ். அப்பகுதியில் மசாஜ் பார்லர் நடத்தி வந்தவர் செந்தில்குமார்.
இவரிடம் வின்சென்ட் ஜெயராஜ் சென்று தொடர்ந்து பார்லர் நடத்த வேண்டும் என்றால் ரூ 50 ஆயிரத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
டிக் டாக் ஆப்புக்கு நிரந்தர தடை? பிளே ஸ்டோரிலிருந்து நீக்குமாறு கூகுள், ஆப்பிளுக்கு இந்தியா கடிதம்
மேலும் பார்லரில் பாலியல் தொழில் செய்யவும் அவர் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியிடம் செந்தில்குமார் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் மறைந்திருந்த போலீஸார், வின்சென்ட் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமான பிடித்தனர். இதையடுத்து வின்சென்ட்டை போலீஸார் கைது செய்தனர்.