சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

73வது சுதந்திர தினம்.. சென்னையில் நீதிபதிகள் & பார் கவுன்சில் உறுப்பினர்கள் கொடி ஏற்றி கொண்டாட்டம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் தேசிய கொடி ஏற்றி கொண்டாடினார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் தேசிய கொடி ஏற்றி கொண்டாடினார்கள்.

பலரின் தியாகங்கள், கடும் போராட்டம் மற்றும் அமைதியான அகிம்சை போராட்டத்தால் இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் அடைந்தது. இதையடுத்து இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Chennai Bar Council Lawyers and Judges celebrate their Independence day

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதேபோல் தமிழக முதல்வர் பழனிச்சாமி சென்னையில் கொடி ஏற்றி வைத்தார். அதேபோல் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியாளர்கள் கொடியை ஏற்றினார்கள்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹிலரமானி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், கொடியேற்றி வைத்த பின்னர் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

Independence day 73: ஹையா... இன்று டிவி சீரியல்களுக்கு பைபை.. ஆனால்...? Independence day 73: ஹையா... இன்று டிவி சீரியல்களுக்கு பைபை.. ஆனால்...?

இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

அதேபோல் தமிழ்நாடு பார் கவுன்சில் வளாகத்தில் இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

Chennai Bar Council Lawyers and Judges celebrate their Independence day

இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் p.s.அமல்ராஜ் துணை தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பிரபாகரன், பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் பிரிசில்லா பாண்டியன், k.பாலு, மோகனகிருஷ்ணன், அய்யாவு, சரவணன் ஸ்ரீமுருகன் ,பார் கவுன்சில் செயலாளர் மற்றும் நிர்வாகிகள், வழக்கறிஞர் கலந்து கொண்டனர்.

English summary
Chennai Bar Council Lawyers and Judges celebrate their Independence day today morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X