சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் மின்சார ரயிலில் செல்வோர் கவனத்துக்கு.. இன்று முதல் 5 நாட்கள் ரயில்சேவைகள் மாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் ரயில்வே தண்டாவளத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று முதல் 5 நாட்களுக்கு அதாவது நவம்பா் 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில்கள் கடற்கரை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா: ரயில் விபத்தில் சிக்கிய ஓட்டுநர் 8 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்பு தெலுங்கானா: ரயில் விபத்தில் சிக்கிய ஓட்டுநர் 8 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்பு

இரவு ரயில்கள்

இரவு ரயில்கள்

அதேபோல் மறுமார்க்கமாக செங்கல்பட்டு-சென்னை கடற்கரை: இரவு 10.15, 11.10 மணிக்குச் செல்லும் ரயில்கள் செங்கல்பட்டிலிருந்து இயங்காது என்றும் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு கடற்கரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை ரயில்கள்

அதிகாலை ரயில்கள்

இதேபோல் சென்னை கடற்கரையில் செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, காலை 6.05, 6.43 மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதிகாலை ரயில்கள்

அதிகாலை ரயில்கள்

இதேபோல் சென்னை கடற்கரையில் செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, காலை 6.05, 6.43 மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரத்தில் இருந்து

தாம்பரத்தில் இருந்து

இதேபோல் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, இரவு 7.25, 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் செங்கல்பட்டிலிருந்து இயங்காது என்றும் தாம்பரத்தில் இருந்து தான் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8.40 ரயில்

காலை 8.40 ரயில்

இதனிடையே செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே காலை 8.40 மணிக்கு இயக்கப்படும் செமி பாஸ்ட் மின்சார ரயில் செங்கல்பட்டு -சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்கள் சேவை ரத்து

5 நாட்கள் சேவை ரத்து

செங்கல்பட்டுக்கான இரவு மற்றும் அதிகாலை நேர ரயில் சேவைகள் ரத்து என்பது நவம்பர்11ம் தேதி இன்று தொடங்கி நவம்பர் 15ம் தேதி வரை 5நாட்கள் அமலில் இருக்கும். பாரமரிப்பு பணிமுடிந்ததும் 16ம் தேதி முதல் வழக்கமான ரயில்சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

English summary
Chennai-Chengalpattu Electric trains night service and evening train service canceled for next 5 days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X