கார் நம்பர் பிளேட்டில் ஆபாச வார்த்தைகள்.. சென்னையில் கல்லூரி மாணவர் கைது!
சென்னை: சென்னையில் கார் நம்பர் பிளேட்டில் பெண்கள் குறித்து இழிவான அர்த்தம் அளிக்கும் வார்த்தையை எழுதியிருந்த கல்லூரி மாணவர், 4 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
பெண்கள் குறித்து இழிவான அர்த்தம் அளிக்கும் வார்த்தை எழுதப்பட்டிருந்த நம்பர் பிளேட் கொண்ட காரின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த காரை மாதவரம் பகுதியில் பார்த்த துணை கமிஷனர் பிரியா 7 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று காரை மடக்கினார்.
காரில் இருந்த கல்லூரி மாணவர் பிராட் போர்ட் எர்ரோலை (22) கைது செய்தனர். காரை பிடித்த போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். 4 மாதங்களாக இந்த காரை தேடி வந்த நிலையில் காரை துரத்த தொடங்கியதுமே அதனை தெரிந்து கொம்ட எர்ரோல் சிக்னல்களில் கூட நிற்காமல் சென்றுள்ளார். எனினும் அவர் பிடிப்பட்டார்.
50 சதவீத ஒப்புகைசீட்டுகளை எண்ணியே ஆகணும்.. மீண்டும் ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்.. மறுசீராய்வு மனு
இந்த காரை 2 ஆண்டுகளுக்கு முன்னர் எர்ரோல் வாங்கியதாகவும் பழைய உரிமையாளரின் பெயரிலேயே ஆர் சி புக் இருப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து எர்ரோல் மீது காரை பெயர் மாற்றம் செய்யதாதது குறித்தும் வழக்கு பதிவு செய்தனர்.