சென்னை மின்சார ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட்டம்.. 15 கல்லூரி மாணவர்கள் கைது
சென்னை: சென்னை மின்சார ரயிலில் ஆயுத பூஜை கொண்டாட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்ட்ரலில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதுபோல் இவர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக ரயிலில் ஏறி பதாகை கட்ட முயன்றனர். அதை ரயில்வே போலீஸ் பார்த்துவிட்டு உடனடியாக 15 பேரை கைது செய்தனர்.இதுபோல் தாரை தப்பட்டையுடன் மாணவர்கள் வந்ததால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.
Comments
English summary
Chennai college students 15 were arrested by RPF as they celebrate Ayudha Pooja in Electric train.
Story first published: Thursday, October 25, 2018, 17:55 [IST]