கொழுந்தனுடன்.. பலமுறை ஜாலி.. விதம் விதமாக போஸ்.. தட்டிகேட்ட கணவரை செருப்பால் அடித்து.. கடைசியில்..!
தம்பியை அடித்தே கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்
சென்னை: கொழுந்தனுடன் விதவிதமாக போட்டோக்களை எடுத்து தள்ளி உள்ளார்.. பலமுறை ஜாலியாகவும் இருந்துள்ளார் மரியா.. எல்லாவற்றிற்கும் மேலாக கணவனை செருப்பால் அடிக்கவும், அந்த விவகாரம்தான் கொலையில் வந்து முடிந்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டத்தை சேர்ந்தவர் பழனி... இவர் ஒரு ஆட்டோ டிரைவர்.. இவரது மனைவி மரியா.. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பழனியின் தம்பி பெயர் செந்தில்குமார்.
இவருக்கும், அண்ணி மரியாவுக்கும் கள்ள தொடர்பு இருந்துள்ளது.. இதை பழனி கண்டித்தும் அவர் கேட்கவில்லை.. அதனால் ஆத்திரமடைந்த அண்ணன், தம்பியை கொன்றுவிட்டார்.
சென்னையில் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த தம்பி.. அடித்துக் கொன்ற அண்ணன்.. பரபர வாக்குமூலம்
அதிர்ச்சி
இந்த சம்பவம் சென்னையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.. அதில் புது புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. சில வருஷத்துக்கு முன்பு பழனிக்கு ஒரு தீ விபத்து ஏற்பட்டதாம்.. அதில் படுகாயம் அடைந்துள்ளார்.. அதனால் அண்ணனை கவனித்து கொள்ள தம்பி செந்தில், வீட்டுக்கு வந்து தங்கி உள்ளார்.. அப்போதுதான், செந்திலுக்கும், அண்ணி மரியாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
கல்யாணம்
இந்த விஷயம் தெரிந்ததும் பழனி அதிர்ச்சி அடைந்துள்ளார்.. அதனால் ஒரு கல்யாணம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து, தம்பிக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து கல்யாணமும் செய்து வைத்தார்.. ஆனாலும், அண்ணியையே சுற்றி சுற்றி வந்துள்ளார்.. இந்த ஜோடி பலமுறை உறவு கொண்டுள்ளது.. வித விதமாக செல்பிகளை எடுத்து கொண்டுள்ளனர்.
அண்ணி
இதை பழனியால் பொறுக்க முடியவில்லை... இன்னொரு பக்கம் செந்தில்குமாரின் மனைவியாலும் பொறுத்து கொள்ள முடியவில்லை.. கணவன் இப்படி அண்ணி பின்னாடியே சுற்றி கொண்டிருக்கிறாரே என்று மனம் நொந்து தூக்கு போட்டு தற்கொலையும் செய்து கொண்டாராம்.
மயிலாப்பூர்
அங்கு போனதுடன், செந்திலுடன் தான் ஒன்றாக இருக்கும் படங்களையும் பழனிக்கு அனுப்பி வெறுப்பேற்றி உள்ளார். இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு மயிலாப்பூருக்கு வந்த மரியா, செந்தில்குமாரை சந்திக்க வீட்டிற்கு சென்றார்... இந்த விஷயம் தெரிந்து பழனி அங்கு சென்றார்.. அவர்களுக்குள் தகராறும் ஏற்பட்டுள்ளது.. உடனே அண்ணனை கெட்டியாக செந்திகுமார் பிடித்து கொள்ள, மனைவி மரியா, கணவனை செருப்பால் அடித்துள்ளார்.
Recommended Video
கொலை
இதுதான் பழனிக்கு உச்சக்கட்ட வெறுப்பையும், ஆத்திரத்தையும் உண்டு பண்ணியது.. அதனால், சம்பவத்தன்று நன்றாக குடித்துவிட்டு, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தம்பி செந்திலின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார்.. அவர் அதில் சாகவில்லை என்பதும் சிமெண்ட் கல்லைப் போட்டு படுகொலை செய்துள்ளார். பிறகு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.