சென்னையில் முதல் முறையாக 1000க்குக் கீழ் குறைந்த தொற்று.. சூப்பர் திருப்பம்
சென்னை: சென்னையில் ஜூன் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 984 பேர் கொரோனா தொற்றால பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த ஜூலை 2வது வாரத்திற்கு பிறகு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணம் அடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம் மற்றும் ஜூலையில் முதல் வாரங்களில் தினமும் 2 ஆயிரத்தை தாண்டி தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் சென்னையில் தற்போது சராசரியாக ஒரு நாளில் 1000 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு தொற்று.. இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் உயிரிழப்பு கிடுகிடு
சென்னையில் குறைவு
99 நாட்களுக்கு பிறகு சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000-க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு இன்று சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 984 ஆக உள்ளது.
எவ்வளவு பேர் பாதிப்பு
சென்னையில் கொரோனாவால் இன்றுடன் சேர்த்து இதுவரை 107109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 93231 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 11606 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2272 பேர் இதுவரை சென்னையில் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 24 பேர் பலியாகி உள்ளனர்.
அதிகரிக்கும் உயிரிழப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் அதேநேரம் தென்மாவட்டங்கள், மற்றும் வட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் உயிரிழப்பும், தொற்று பாதிப்பும் சென்னையை சுற்றி மட்டும் அதிகமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது எல்லா மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.
சென்னையை சுற்றி
சென்னையில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள போதிலும் சென்னையை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. வேலூர், கடலூர், கோவை, ராணிப்பேட்டை, தேனி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.