சென்னையில் வரலாறு காணாத குளிர்.. பேய்ட்டி புயல் எதிரொலி
சென்னை: பேய்ட்டி புயல் எதிரொலியாக சென்னை நகரிலும், சுற்றுப் பகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிராக உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு
சென்னைக்குப் பக்கத்தில் பேட்டாய் புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. ஊட்டியைப் போல மாறியுள்ளது சென்னை. கொஞ்சம் கூட குளிர் குறையவில்லை.
இந்த புயலால் சென்னைக்குப் போதிய மழை கிடைக்காத நிலையே காணப்படுகிறது. ஒரு வேளை இருக்குமானால், அடுத்த சில மணி நேரங்களில் எதிர்பார்த்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் மழையை எதிர்பார்க்காதீர்கள்.
இந்த சீசன் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு ஏமாற்றமான சீசன். அதற்காக வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. சென்னை வரலாற்றில் மோசமான சீசனுடன் இந்த வருடத்தை நாம் முடிக்க வேண்டியதுதான் என்று வெதர்மேன் கூறியுள்ளார்.