சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பேப்பர் குடோனில் தீ விபத்து.. தீயணைப்பு வீரர்கள் தீவிரம்!
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னையில் அண்ணா சாலை பகுதியில் நிறைய பேப்பர் குடோன்கள் செயல்பட்டு வருகிறது. அங்கு இருக்கும் மக்களின் பிரதான தொழில்களில் ஒன்றாக பேப்பர் குடோன்கள் உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் அதிக மக்கள் வசிக்கும் நெருக்கடியான பகுதிகளில் ஒன்றான திருவல்லிக்கேணியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. திருவல்லிக்கேணியில் உள்ள பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கு 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
மின்கசிவு காரணமாக இந்த தீ ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். கட்டிடத்திற்கு உள்ளே காவல் பணியில் ஈடுபட்டு இருந்த சிலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அதேபோல் தீ அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.