புதிய மோட்டார் வாகன சட்டவிதிகளை அமல்படுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்ட ஹைகோர்ட்
சென்னை: புறநகர் மற்றும் மாவட்டங்களில் கட்டாய ஹெல்மட் சட்ட விதிகளை அமல்படுத்தவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..
இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாரயணன் மற்றும் ஷேஷாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது,அப்போது மோட்டார் வாகன புதிய சட்ட விதிகளை அமல்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
பின்னர் மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக என்ன விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள் இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் விழிப்புணர்வு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும் இல்லையென்றால், இந்த வழக்கில் மனுதாரரை நீக்கவிட்டு நீதிமன்றமே தாமாக வழக்கு விசாரணையை எடுத்துக்கொள்ளும் என தெரிவித்தார்.
தபெதிகவினர் 92 பேர் மீதான வழக்கு.. ரத்து செய்தது ஹைகோர்ட்
ஹெல்மட் அணிவது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும்,குறிப்பாக மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும், சட்டத்தை அமல்படுத்துவது அதிகாரிகளுடைய கடமை என தெரிவித்த நீதிபதிகள் அரசின் நிர்வாக பணிகளை நீதிமன்றங்கள் நடத்த முடியாது என கூறினர்.
கட்டாய ஹெல்மட் சட்டம் என்பது அரசின் சட்டம் எனவும்,அதனை உரிய முறையில் அமல்படுத்தபடுகிறதா என்பதை மட்டுமே நீதிமன்றம் விசாரிக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக காவல்துறை தவிர போக்குவரத்து துறை (transport dept) என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கேள்வி எழுப்பினார்..
சென்னையை தவிர மதுரை போன்ற பெரு நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளிலும் கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்தவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள் அனைவருக்கு சமுதாய பொறுப்பு உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள் கட்டாய ஹெல்மட் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த காட்சி ஊடகங்கள் தங்களுடைய பங்களிப்பை செய்யவேண்டும் என தெரிவித்தனர்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.