ஜல்லிக்கட்டு போட்டி.. புதிய கட்டுப்பாடு விதித்தது ஹைகோர்ட் மதுரை கிளை
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த புதிய கட்டுப்பாடுகளை சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்போது ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மதுரை பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு நடத்த 25-ஆம் தேதி அனுமதி கோரி பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதித்தால் என்ன?
தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்துவதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டிய நிலை உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
Chennai Highcourt Madurai branch orders new restriction on Jallikattu.
Story first published: Monday, February 18, 2019, 17:30 [IST]