அனுமதியின்றி கட்டப்பட்ட டாஸ்மாக் கடையை மூட சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை வடபழனியில் குடியிருப்புகாக அனுமதி பெற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வடபழனியை சேர்ந்த வாசுதேவன் பொது நல வழக்கில் வடபழனி நெற்குன்றம் பாதையில் அதிகளவில் குடியிருப்பு பகுதிகள் உள்ளது இந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டு கடைக்கு வருவோர் தங்கள் வாகனங்களை 100 அடி சாலையில் நிறுத்துகின்றனர்.
இதனால் சாலையை பயன்படுத்த பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படு வாய்ப்புள்ளது என மனுவில் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடை அமைந்துள்ள கட்டிடம் குறித்து தகவல் அறியும் உரிமம் சட்டத்தில் கேட்டபோது குடியிருப்புக் கட்டடத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனம் அதை மறைத்து அந்த கட்டிடத்தில் புதிய டாஸ்மாக் கடை திறந்து உள்ளதாகும். எனவே சட்டவிரோதமாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்தும் சட்ட விரோதமாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடும்படி உத்தரவிட்டனர்.