சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கயிறு கட்டி இறக்கிய குப்பனின் சடலம்.. வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்.. விரைவில் விசாரணை

கயிறு கட்டி சடலத்தை இறக்கியது குறித்து ஹைகோர்ட் வழக்கு பதிவு செய்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    அந்தரத்தில் தொங்கிய உடல்.. முகத்தில் அறையும் ஜாதி வெறி-வீடியோ

    சென்னை: குப்பனின் சடலத்தை கயிறு கட்டி பாலத்தில் இருந்து இறக்கிய விவகாரம் தொடர்பாக ஹைகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் காலனி பகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இவர்களுக்கு என்று தனியாக மயானம் இல்லை. அதனால், ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள ஒரு இடத்தைதான் சுடுகாடாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில், இங்கு வசித்து வந்த 55 வயதுடைய குப்பன் என்பவர், கடந்த 18ந்தேதி எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் இறந்துவிட்டார். வழக்கமான சுடுகாட்டில் பிணத்தை எரிக்க வசதியில்லை. அதனால் குப்பனின் உறவினர்கள், பாலாற்றங்கரையோரம் அரசின் அதிகாரபூர்வமற்ற சுடுகாடு உள்ளதால், அங்கு கொண்டு சென்று எரிக்கலாம் என்று முடிவு செய்து சடலத்தை கொண்டு செல்ல முயன்றனர்.

    அந்தரத்தில் தொங்கிய குப்பன் உடல்.. முகத்தில் அறையும் ஜாதி வெறி.. உறைந்து போன வேலூர்!அந்தரத்தில் தொங்கிய குப்பன் உடல்.. முகத்தில் அறையும் ஜாதி வெறி.. உறைந்து போன வேலூர்!

    தகனம்

    தகனம்

    ஆனால் அவ்வழியாக உள்ள நில உரிமையாளர்கள் வழிவிட மறுத்தனர். இதையடுத்து வேறுவழியின்றி குப்பனின் பிணத்தை பாடை கட்டி 20 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து பிணத்தை கயிறு கட்டி இறக்கி, பாலாற்றின் கரையோரம் தகனம் செய்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    பனந்தோப்பு

    பனந்தோப்பு

    இதையடுத்து கலெக்டர் சண்முகசுந்தரம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி, தமிழக-ஆந்திர எல்லை பகுதியான ஜவ்வாதுராமசமுத்திரம் பகுதியில் உள்ள பனந்தோப்பு இடத்தில் அரசுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் ஆதி திராவிடர் காலனி மக்களுக்காக மயானத்துக்கு 50 சென்ட் இடத்தை ஒதுக்கீடு செய்தார். இதை தவிர அங்கு தகனமேடை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    ஹைகோர்ட்

    ஹைகோர்ட்

    இதனிடையே, சென்னை ஐகோர்ட்டு இது சம்பந்தமாக தானாக வந்து வழக்கை பதிவு செய்துள்ளது. மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், "இறந்த குப்பனின் பிணம் சாதி பாகுபாட்டின் காரணமாக பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    விளக்கம்?

    விளக்கம்?

    எனவே இது தொடர்பாக ஹைகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர், தாமாக முன்வந்து வழக்கினை பதிவு செய்துள்ளனர். எனவே இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இது தொடர்பாக கலெக்டரிடமும் விளக்கம் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    A case has been filed by the Madras High Court in the case of Kuppans funeral issue near Vellore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X