சட்டென்று மாறிய வானிலை.. இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை.. இரவில் நடுங்கும் சென்னை
சென்னை: சென்னையில் பல பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் நல்ல மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று மாலை முதல் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் கூடின.
இதையடுத்து சோழிங்கநல்லூர், போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் நல்ல மழை கொட்டி தீர்த்தது. மடிப்பாக்கம், ஒலிம்பியா டெக் பார்க், தாம்பரம், வடபழனி, கோயம்பேடு, மதுரவாயல், நொளம்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரவாயலில் இடியுடன் கூடிய மழை பெய்ததை, வீடியோவாக எடுத்து ஷேர் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.
Heavy Rain at #Maduravoyal..🌩️@Chennai_Rains @chennaiweather pic.twitter.com/8b7X7PpIkG
— ராஜாமுகமது (@iamrajamohamed) August 28, 2019
ஊரே மழையால் மகிழ்ச்சியடைந்தால், இந்த நெட்டிசன் என்ன சொல்கிறார் பாருங்கள்:
எப்ப பாரு நான் துணி தொவச்சி காயவச்சிட்டு ஆபிஸ் போய்ட்டு
— BLACK MICKY 👽 (@ksr_143) August 28, 2019
வீட்டுக்குகு வரதுக்குள்ள மழை வந்து மொத்தம நினைச்சி வச்சிட்டு போயிடுது 😿😭😒 #chennairain pic.twitter.com/yrisnTPW8a
எப்ப பாரு நான் துணி தொவச்சி காயவச்சிட்டு ஆபிஸ் போய்ட்டு. வீட்டுக்கு வரதுக்குள்ள மழை வந்து மொத்தம நினைச்சி வச்சிட்டு போயிடுது. இந்த கவலை இவருக்கு போலும்.