பொங்கல் பரிசுக்கு பதில் நல்ல சாலை, மருத்துவ வசதிகளை கொடுக்கலாமே- உயர்நீதிமன்றம் நறுக்
Recommended Video
சென்னை: பொங்கல் பரிசுக்கு பதில் நல்ல சாலை, மருத்துவ வசதிகளை கொடுத்திருக்கலாமே என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அவசியம் என்ன?
இதற்கு கோவையைச் சேர்ந்த டேனியர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது நீதிபதிகள் கேள்வி எழுப்புகையில் பொங்கல் பரிசை அனைவருக்கும் வழங்க வேண்டிய அவசியம் என்ன?
அவசியம் என்ன
1000 ரூபாய் யாருக்கு போய் சேர வேண்டும் என்பதை வகைப்படுத்திய பிறகே இதை வழங்கியிருக்க வேண்டும். பொங்கல் பரிசாக ரூ. 1000 கொடுக்க வேண்டிய தேவை என்ன?
வரிப்பணம்
அரசின் கொள்ளை முடிவு என்றால் யாரும் கேள்வி கேட்க முடியாது என நினைக்கக் கூடாது. கட்சியின் பணம் என்றால் யாரும் கேட்க மாட்டார்கள். வரிப்பணம் என்பதால்தான் இந்த கேள்வி எழுகிறது.
மருத்துவ உதவி
இந்த ரூ 1000 பொங்கல் பரிசை நல்ல தரமான சாலை, மருத்துவ உதவி ஆகியவற்றுக்கு செலவு செய்யலாமே என்று நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். இதையடுத்து பொங்கல் பரிசுக்கு தடை விதித்தும் அவர் உத்தரவிட்டார்.