சென்னை ஐஐடி மாணவர்களை வாட்டும் மன அழுத்தம்.. காரணிகள் பல.. தீர்வுகள் எப்போது?
மாணவி பாத்திமா தற்கொலை குறித்து மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
Recommended Video
சென்னை: சென்னை ஐஐடி மாணவர்களிடம் பாத்திமா லத்தீபின் மரணம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தம் ஏற்படுவதற்கு இங்கு பல காரணிகள் உள்ளதாக மாணவர்களிடையே பொதுவான கருத்து நிலவுகிறது.
படிப்பு ஒரு பெரும் பிரச்சினை என்பது இவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது. அதிக அளவிலான சுமை ஏற்படுவதால் மன அழுத்தம் இங்கு சாதாரணமான ஒன்று என்பது இவர்களின் கருத்தாகும்.
சில பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர்கள் கூறுகையில், "இங்கு படிக்க வரும் பெரும்பாலான மாணவர்கள் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மிகப் பெரிய பணக்கார பின்னணியைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கும், சாதாரண பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நிறைய குழப்பங்கள் ஏற்படுவது இங்கு சகஜமான ஒன்று.
சுடிதார் பேன்ட்டைகூட இறுக்கி கட்ட தெரியாது.. பயப்படுவா.. அவள் எப்படி தூக்கில்.. கதறும் பாத்திமா தாய்
பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களுடன் எளிதாக இணைந்து பழகுவதில் பல சிரமங்கள் உள்ளன. அவர்கள் எப்போதும் தனிமையில் இருக்கக் கூடிய வகையிலான சூழல்கள் இங்கு அதிகம். இங்குள்ள சூழலுக்கு அனைத்துத் தரப்பினருமே பழகிக் கொள்வதிலும் பல சிக்கல்கள் உள்ளன.
இதுதவிர பேராசிரியர்கள் - மாணவர்கள் இடையிலான உறவு பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதும் இன்னொரு காரணம். இப்படி மன அழுத்தம் ஏற்படக் கூடிய வாய்ப்புகளும், காரணிகளும் நிறையவே உள்ளன. ஆனால் இதுதான் என்று தனிப்பட்ட முறையில் எந்த காரணத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலை உள்ளதாக மாணவர்கள் கருதுகிறார்கள்.
எந்தக் காரணமாக இருந்தால் என்ன மன அழுத்தம் அறவே தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு நிச்சயம் அப்படி ஒரு சூழல் இருக்கவே கூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். படிக்கும் பிள்ளைகள் நிம்மதியான சூழலில் படித்தால்தான் நிச்சயம் அவர்களால் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். சமூகமும் அவர்களால் பயன்பட முடியும்.